இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகைகள் நடிக்கும்போது அவர்களுக்குள் ஈகோ வருவது இன்று, நேற்றல்ல முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. 1962ம் வருடம் வெளிவந்த படம் பார்த்தால் பசி தீரும். இதில் சிவாஜி, ஜெமினி, சாவித்ரி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி, கே.ஏ.தங்கவேலு, கமலஹாசன் (குழந்தை நட்சத்திரம்) உள்ளட ஏராளமானோர் நடித்திருந்தார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்தப் படம் முடிந்ததும் சாவித்ரி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி இவர்களில் யார் பெயரை டைட்டில் கார்டில் முதலில் போடுவது என்ற பிரச்சினை வந்தது. "நான்தான் இப்போது மார்க்கெட்டில் நம்பர் ஒண் இடத்தில் இருக்கிறேன் என் பெயர்தான் முதலில் வரவேண்டும்" என்றார் சரோஜாதேவி. "நான்தான் சீனியர் என்பெயர்தான் முதலில் வரவேண்டும்" என்றார் சாவித்ரி, "எல்லோருக்கும் சீனியர் நான். வயதிலும், அனுபவத்திலும் மூத்தவள் என் பெயர்தான் முதலில் வரவேண்டும்" என்று பிடிவாதம் பிடித்தார் சவுகார் ஜானகி. எல்லோரிடமும் சரி சரி என்ற தலையாட்டிவிட்டார் பீம்சிங்.