ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயன் இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பதற்கு முக்கிய காரணம் தனுஷ் மட்டுமே. அவருக்கு தன்னுடைய '3' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து தொடர்ந்து 'எதிர் நீச்சல், காக்கி சட்டை' ஆகிய படங்களில் நாயகனாக நடிக்க வைத்து அவருக்கு மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதன்பின் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக கோலிவுட்டில் பரபரப்பு செய்தி பரவியது. 'முடிஞ்சா இவன புடி' திரைப்பட இசை வெளியீட்டு விழாவிலும் இருவரும் முகம் கொடுத்து பேசாதது அதை உறுதி செய்தது.
இதனிடையே தனுஷ் நடித்துள்ள 'கொடி' படத்தின் தெலுங்கு இசை வெளியீடும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரெமோ' படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழாவும் சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இரண்டு விழாக்களுமே ஒரே ஹோட்டலில், ஒரே நேரத்தில் நடந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தனுஷ் பற்றியும் சிவகார்த்திகேயன் பற்றியும் தெலுங்குத் திரையுலகம் வரை நன்றாகவே தெரியும். அப்படியிருக்கும் போது இருவரும் ஒரே சமயத்தில் இப்படி தங்களது பட விழாக்களை நடத்தி தங்களுக்குள் இருக்கும் பனிப் போரை தெலுங்குத் திரையுலகம் வரை அழைத்துச் சென்றுவிட்டார்கள் என இங்குள்ளவர்கள் வருத்தப்படுகிறார்கள்.