ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை வெளிவந்துள்ள படங்களில் 'மாஸ்டர் பீஸ்' என்று இன்று அழைக்கப்படும் ஒரு படம் 'நாயகன்'. மணிரத்னம் இயக்கம், இளையராஜா இசை, கமல்ஹாசன் நடிப்பு, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, இன்றைய முன்னணி அம்மா நடிகை சரண்யாவின் அறிமுகம் என பல்வேறு விதங்களில் 'நாயகன்' படம் கமல்ஹாசன் ரசிகர்களாலும் திரையுலக ரசிகர்களாலும் 30வது வருடத்தை 21ம் தேதி முதல் கொண்டாடி வருகிறது.
பம்பாயில் வாழ்ந்த வரதராஜ முதலியார் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 'நாயகன்' படத்தில் வேலு நாயக்கர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. அந்தக் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன், இளைஞர், நடுத்தர வயது, வயதானவர் என விதவிதமான தோற்றங்களில் நடித்து அசத்தினார். சிறந்த நடிப்புக்காக கமல்ஹாசனுக்கும், சிறந்த ஒளிப்பதிவிற்காக பி.சி.ஸ்ரீராமிற்கும், சிறந்த கலை இயக்கத்திற்காக தோட்டா தரணிக்கும் அந்த ஆண்டிற்கான தேசிய விருது கிடைத்தது.
சில படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம். சில திரைப்படங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்றைக்கும் பாடமாக இருக்கும். அப்படி பல விதங்களில் 'நாயகன்' படம் பலரது மனதையும் கொள்ளையடித்த ஒரு படமாக விளங்கி வருகிறது.
“நாயகனுக்கும் குருதிப்புனலுக்கும் எனக்கும் ஆயுளைக் கூட்டிய ரசிகர்கள் அனைவர்க்கும் நன்றி. இத்தகை ரசனைக்கு விருந்தோம்ப ஆனவரை முயல்கிறேன்,” என சற்று முன் நாயகன் கமல்ஹாசனும் தன் பங்கிற்கு நாயகனை நினைவுபடுத்தியுள்ளார்.