பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
இருமுகன் படத்தை அடுத்து காஷ்மோரா, டோரா, இமைக்கா நொடிகள் மற்றும் மீஞ்சூர் கோபி இயக்கும் படம் என நான்கு படங்களில் நடிக்கிறார் நயன்தாரா. இதில் காஷ்மோரா படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. டோரா, மீஞ்சூர் கோபி இயக்கும் படங்களில் நடித்து முடித்து விட்ட நயன்தாரா, இமைக்கா நொடிகளில் நடிக்கவிருக்கிறார். இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மோகன்ராஜா இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜயசேதுபதியுடன் இணைந்து நயன்தாரா நடித்த நானும் ரெளடிதான் படம் வெளியாகி அக்டோபர் 21-ந்தேதியோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதை கொண்டாடும் வகையில் அந்த படக்குழுவினர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி கொடுத்துள்ளனர். இந்த பார்ட்டியில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் உற்சாக மாக கலந்து கொண்டு பார்ட்டியை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த படத்தில் இணைந்தபோதுதான் நயன்தாரா- விக்னேஷ்சிவன் காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.