தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான படம் பாகுபலி. சரித்திர கதையில் பிரமாண்டமாக உருவான இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்திருந்தனர். மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படம் இந்தி திரையுலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த பிரமாண்ட படமானது. அதையடுத்து இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் அதே நடிகர் நடிகைகளை வைத்து இயக்கிக்கொண்டி ருக்கிறார் ராஜமவுலி.
மேலும், பாகுபலி முதல் பாகத்தின் தொடர்ச்சியான கதையில் உருவாகும் இந்த படத்தை முந்தைய பாகத்தை விடவும் பிரமாண்டமாக இயக்கி வரும் ராஜமவுலி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி படத்தை வெளியிடப்போவதாக அறிவித் துள்ளார். இந்த நிலையில், நேற்று பாகுபலி-2 படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியிடப் பட்டது. பிரபாஸ் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பது போல் வெளியாகியிருக்கும் அந்த போஸ்டர் இணையதளங்களில் பெரிய அளவில் டிரண்ட்டாகியிருக்கிறது.