பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கங்காரு, வந்தாமல, கதிரவனின் கோடைமழை போன்ற படங்களில் நடித்தவர் பிரியங்கா. தமிழ்நாட்டு நடிகையான இவர், ஆதித்யா சேனல் தொகுப்பாளர் அசாருடன் இணைந்து நடித்துள்ள சாரல் படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தின் ஆடியோ விழாவில், தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு யாரும் வாய்ப்பு கொடுப்பதில்லை என்று பீல் பண்ணி பேசினார் ஸ்ரீ பிரியங்கா. அதையடுத்து அதே விழாவுக்கு வந்திருந்த நடிகர் விஜயசேது பதி, கண்டிப்பாக உங்கள் திறமைக்கு சான்ஸ் கிடைக்கும் என்று பிரியங்காவுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி பேசினார். அதிலிருந்து விஜயசேதுபதி படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார் ஸ்ரீ பிரியங்கா.
இந்த நிலையில், தற்போது ரீங்காரம், திருப்பதி லட்டு போன்ற படங்களில் நடித்து வரும் அவர், முன்னணி நடிகர்களின் படங்களுக்காக காத்திருந்து வெறுத்துப்போனவர், தற்போது பேருந்து நிலையம் -என்றொரு படத்தில் புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியிருக் கிறார். அதோடு, நல்ல கதை, கதாபாத்திரமாக இருந்தால் இனிமேல் பெரிய ஹீரோ, சிறிய ஹீரோ என்கிற பாரபட்சம் பார்க்காமல், கதைக்கேற்ப கிளாமர் காண்பித்து நடிக்கவும் தயாராகி விட்டா ராம் ஸ்ரீ பிரியங்கா.