'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமான கெளதம் கார்த்தி, முத்துராமலிங்கம் படத்தை அடுத்து ஜெயங்கொண்டான் ஆர்.கண்ணன் இயக்கும் இவன் தந்திரன் என்ற படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை ஆர். கண்ணனே தயாரித்து இயக்குகிறார். வித்தியாசமான காதல் கதையில் உருவாகும் அந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்கிறார். ஆனால், இந்த படத்தில் ஆர்.கண்ணன் இதற்கு முன்பு விமலை வைத்து இயக்கிய ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் நடித்த பிரியாஆனந்தைதான் நாயகியாக நடிக்க இருந்தாராம். ஆனால் கெளதம் கார்த்திக் அதை தடுத்து விட்டாராம்.
காரணம், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை படத்தில் பிரியாஆனந்துடன் இணைந்து நடித்தபோதே கிசுகிசுவில் சிக்கினார் கெளதம். அதை யடுத்து முத்துராமலிங்கம் படத்தில் நடித்து வந்தபோதும் கிசுகிசுக்கள் மீண்டும் பரவி வந்தன. அதனால் தொடர்ந்து பிரியாஆனந்துடன் நடிப்பது கிசுகிசுக்க ளுக்கு உரம் போட்ட கதையாகி விடும் என்பதால், இந்த படத்திற்கு வேறு நடி கையை புக் பண்ணுங்கள் என்று கெளதம் கார்த்திக்தரப்பில் கூறப்பட்டதாம்.அதையடுத்துதான் இவன் தந்திரன் படத்திற்கு ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம்.