டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயர் சிவகுமாருக்கு வருகிற 27ந் தேதி 75வது பிறந்த நாள். 1965ம் ஆண்டு ஏ.சி.திருலோகச்சந்தரின் காக்கும் கரங்கள் படத்தின் மூலம் அறிமுகமாகி 100 படங்களுக்கு மேல் நடித்தார். அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கை காரி, வண்டிக்சக்கரம், சிந்து பைரவி, ராமன் பரசுராமன், கந்தன் கருணை என அவர் பெருமை சொல்லும் படங்கள் ஏராளம்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் அவர் நடித்துள்ளார். தற்போது அவரது வாரிசுகள் சூர்யாவும், கார்த்தியும் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள்.
சிவகுமாரின் 75வது பிறந்த நாளை அவரது மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து மார்கண்டேயருக்கு வைர விழா என்ற தலைப்பில் பிரமாண்ட விழாவாக கொண்டாட இருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக வருகிற 25 மற்றும் 26ந் தேதிகளில் சிவகுமார் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நடக்கிறது. பிறந்த நாள் அன்று சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. இந்த விழாவில் முன்னணி நடிகர் நடிகைகள், சிவகுமாருடன் பணியாற்றிய நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.