பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல மலையாள இயக்குனர் துளசி தாஸ் இயக்கி உள்ள படம் திரைக்கு வராத கதை. இதில் நதியா, இனியா, ஈடன், ஆதிரா, ஆர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர் என்பது இந்தப் படத்தின் சிறப்பு. இந்தப் படத்தில் பெண்களுக்கு இடையேயான லெஸ்பியன் உறவு காட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இயக்குனர் துளசிதாஸ் கூறியதாவது: பெண்களுக்கு இடையிலான லெஸ்பியன் உறவு பற்றியும், ஆண்களுக்கு இடையிலானா ஹோமோ செக்ஸ் பற்றியும் இப்போது நிறைய படங்கள் வந்திருக்கிறது. பல படங்கள் விருதும் வாங்கி உள்ளது. சமீபத்தில் ஒரு இந்திப் படத்தில் அரவிந்த்சாமி ஹோமோ செக்ஸ் மேனாக நடித்திருந்தார். ஆனாலும் எனது படத்தில் லெஸ்பியன் உறவு பற்றி சித்தரிக்கவில்லை.
பெண்கள் மட்டுமே வாழும் ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் மீது இன்னொரு பெண்ணுக்கு எல்லை மீறிய ஈர்ப்பு வருகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று யோசிக்கிறார்கள். பிறகு பெற்றவர்கள் அவர்களை கண்டித்து அது நமது கலாச்சாரத்துக்கு எதிரானது பெண் ஆணோடுதான் வாழ வேண்டும் என்ற அறிவுறுத்த அவர்களும் திருந்துகிறார்கள். இப்படித்தான் நான் படம் எடுத்திருக்கிறேன். ஆபாசமான காட்சிகளோ, பாடல்களோ படத்தில் இல்லை.
நான் தமிழ் மண்ணால் வாழ்க்கை பெற்றவன். மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட மலையாள ஹீரேக்களை வைத்து 65 படங்களை இயக்கியவன். எனக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. தமிழில் வீட்டை பாரு நாட்டை பாரு படத்தை இயக்கி இருக்கிறேன். 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்க வருகிறபோது புதுமையாக ஏதாவது செய்ய வேண்டுமே என்றுதான் பெண்கள் மட்டுமே நடிக்கும் படத்தை உருவாக்கி இருக்கிறேன். படத்தில் ஹாரர் இருப்பதால் தணிக்கை குழுவினர் யுஏ கொடுத்துள்ளனர். மற்றபடி இது அனைவரும் பார்க்கத் தகுந்த தரமான படம். என்றார்.