தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி, நடித்துள்ள படம் அம்மணி. பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் அம்மாக்களின் கதை. பரவலாக மீடியாக்களின் பாராட்டுகளை பெற்ற படம். மக்களின் வரவேற்பையும் பெற்றது. இதனால் சந்தோஷத்தில் இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். தற்போது இந்தப் படத்தை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள சான்ஜோஸ் நகரில் உள்ள தமிழர்கள் இந்த படத்தை அங்கு சிறப்பு திரைப்படமாக திரையிடுகிறார்கள். இந்த திரையிடல் மூலம் கிடைக்கும் லாபத்தை இந்திய கல்வி வளர்ச்சிக்காக செயல்படும் ஐ.எல்.எப் என்ற அமைப்பிற்கு வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஏ.வி.இண்டர்நேஷனல், சினிகேலக்ஸி மற்றும் ஸ்வரம் நிறுவனங்கள் இணைந்து செய்துள்ளன.
இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: பலதரப்பட்ட பிரச்சனைகளுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். அதிலும் குறிப்பாக, சினிமாவில் பெண்கள் தவறான முறையில் சித்தரிக்கப்படுவதற்காகவும், சமூக பொறுப்பை அலட்சியப்படுத்தும் செயல்களுக்காகவும் வலிமையான ஊடகம் மற்றும் சினிமாவின் மூலமாக தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். பலதரப்பட்ட மக்கள் எனக்கு ஆதரவு அளித்து வந்தாலும், சிலர் என்னுடைய கருத்தையும், முயற்சியையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அம்மணி திரைப்படத்திற்கு பிறகு என்னுடைய குரல் பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது என்பதை நான் முழுமையாக உணருகிறேன்.
உலகளவில் அம்மணி திரைப்படம் அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டிருக்கிறது. ரசிகர்களிடம் இருந்து நாங்கள் தொடர்ந்து பெற்று வரும் கருத்துக்களும், வாழ்த்துக்களும் தான் அதற்கு சிறந்த உதாரணம். எனக்கு உறுதுணையாய் இருந்த நண்பர்கள், நலன் விரும்பிகள் ஆகியோருக்கும், என்னுடைய இக்கட்டான சூழ்நிலைகளில் எனக்கு பக்கபலமாய் இருந்த என்னுடைய கணவர், என் மகள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இறைவனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் இவை அனைத்தையும் முடிவு செய்து நடத்தியது அவர் தான். என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.