பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்ரே ஆகியோருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்திற்கு எழுந்த பிரச்னை சுமூகமாகியுள்ளது, இதனால் இப்படம் திட்டமிட்டபடி வருகிற அக்., 28-ம் தேதி ரிலீஸாகும் என தெரிகிறது.
தடை
பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர், நடிகையர் அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய், பாக்., நடிகர் பவாத் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ஏய் தில் ஹை முஷ்கில். கடந்த மாதம், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் யூரியில் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள், 19 பேர் பலியாகினர். இதற்கு கண்டனம் தெரிவித்து, பாக்., நட்சத்திரங்களை, இந்திய திரைப்படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே குரல் எழுப்பினார். பாக்., நடிகர்கள் நடித்த, திரைப்படங்களை திரையிடவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், பாக்., நடிகர் பவாத் கான் நடித்துள்ள, ஏய் தில் ஹை முஷ்கில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சரிடம் முறையிடல்
இந்த படத்தை திரையிடும் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என, தாக்கரே எச்சரித்துள்ளார். இதனால், பல தியேட்டர் உரிமையாளர்கள், இந்த படத்தை திரையிட மறுத்து விட்டனர். இந்நிலையில், படத்தயாரிப்பாளர்களில் ஒருவரான முகேஷ் பட், நேற்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இதுப்பற்றி பேசினார். பின்னர் மாநில அரசுகளுடன் பேசி படத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததாக முகேஷ் தெரிவித்தார்.
சமரசம்
இந்நிலையில் ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் பட், இயக்குநர் கரண் ஜோகர், நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்ரே ஆகியோர் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் சில முடிவுகள் எட்டப்பட்டன.
இதுப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய முகேஷ் பட், எதிர்காலத்தில் பாகிஸ்தான் கலைஞர்களை இந்திய படங்களில் பயன்படுத்தமாட்டோம் என உறுதியளித்தோம். அதோடு, ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தின் துவக்கத்தில், இப்படம் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி என்ற வாசகத்துடன் திரையிடப்படும், ராணுவ நலத்திட்ட உதவிகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் நிதி வழங்கும் என்று தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜ்தாக்ரே, பாகிஸ்தான் கலைஞர்களை எதிர்காலத்தில் தங்கள் படங்களில் பயன்படுத்த மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் எழுத்துப்பூர்மாக உத்திரவாதம் அளிக்க வேண்டும், பாகிஸ்தான் கலைஞர்களை பயன்படுத்திய தயாரிப்பாளர்கள் ராணுவ நிதிக்கு ரூ.5 கோடி அளிக்க வேண்டும் என்று கூறினார்.
இதன்மூலம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தை ராஜ்தாக்ரே இனி எதிர்க்க மாட்டார் என தெரிகிறது. ஆகையால், திட்டமிட்டபடி வருகிற அக்.,28-ம் தேதி இப்படம் பிரச்னையின்றி ரிலீஸாகும் என நம்பப்படுகிறது.