இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான கைதி நம்பர் 150, தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் தான். கத்தி பட இயக்குனர் ஏ.ஆர்..முருகதாஸ் தெலுங்கிலும் இப்படத்திற்கு திரைக்கதை அமைப்பை மேற்பார்வை செய்துள்ளாராம். இயக்குனர் விவி வி நாயக் இயக்கும் இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகின்றார். இப்படத்தில் இடம்பெறும் குத்தாட்ட பாடலுக்கு ராய் லக்ஷ்மியுடன் குத்தாட்டம் போட்ட சிரஞ்சீவி பாடலின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு ஓய்வில் இருகின்றாராம். அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு விரைவில் உக்ரைன் செல்லவுள்ளதாக படப்பிடிப்பு தள தகவல்கல் கூறுகின்றன. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று வரும் சிரஞ்சீவிக்கு ஓய்வு தேவைப்படுவதால் சில நாட்களுக்கு பின்னர் உக்ரைன் செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.