மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மதயானைக்கூட்டம், கிருமி ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் கதிர். அதையடுத்து என்னோடு விளையாடு, சிகை போன்ற படங்களில் நடித்து முடித்திருப்பவர், தற்போது சத்ரு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படங்கள் பற்றி கதிர் கூறுகையில், நான் நடித்து வெளியான இரண்டு படங்களுமே பேசப்பட்டன. அந்த வரிசையில், தற்போது நான் நடித்துள்ள என்னோடு விளையாடு, சிகை போன்ற படங்களும் வித்தியாசமான கதைகளில் உருவாகியுள்ளன. இதில் என்னோடு விளையாடு படத்தில் பரத்துடன் இணைந்து நடித்திருக்கிறேன். சிகை படத்தில் ஷோலோ ஹீரோவாக நடித்துள்ளேன். ஒரு நாளில் நடக்கும் கதையில் உருவாகியுள்ள அந்த படத்திற்காக பெண் வேடத்திலும் நடித்துள்ளேன். சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் அப்படம் திரையிடப்பட்டது. பல படங்கள் மோதிய நிலையில், அந்த விழாவில் திரையிட என் படம் தகுதி பெற்றதை பெருமையாக கருதுகிறேன்.
அடுத்தபடியாக சத்ரு என்ற படத்தில் நடிக்கிறேன். இந்த படம் என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லும் படமாக இருக்கும். கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படம் பாணியில் வடசென்னையில் நடக்கும் ஆக்சன் திரில்லர் படம். இந்த கதையில் அதிக இன்வால்வாகி நடிக்கிறேன். இதில் எனக்கு ஜோடியாக சிருஷ்டி டான்கே நடிக்க, வில்லனாக ராட்டினம் லகுபரன் நடிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர், ஆக்சன், செண்டிமென்ட் என அழுத்தமான படம். இந்த படத்திற்கு பிறகு நானும் கவனிக்கப் படும் நடிகராகி விடுவேன் என்று கூறும் கதிர், இந்த படத்தைத் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க பேசிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்.