'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒரு படம் ஓடி விட்டால் சம்பளத்தை கோடிகளில் உயர்த்துவது சமீப காலமாக பேஷனாகி விட்டது. அதற்கு நடிகர் ஜீவா மட்டும் விதிவிலக்கா என்ன? கோ படம் தாறுமாறாக வெற்றி பெற்றதையடுத்து சம்பளத்தை உயர்த்துவதாக கூறியிருந்தார். ஆனால் அதற்கு முன்பு கமிட் ஆன படங்களில் பழைய சம்பளம்தான். இந்நிலையில் கோ படத்திற்கு பிறகு வெளியான ரவுத்திரம், வந்தான் வென்றான் ஆகிய 2 படங்களும் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. ஆனாலும் சம்பள உயர்த்தியது உயர்த்தியதுதான் என்று கூறுகிறாராம் ஜீவா.
அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஒரு கோடி சம்பளமும், மிஷ்கினின் முகமூடிக்கு ஒரு கோடியே அறுபது லட்சமும் வாங்கியிருக்கும் அவர், அடுத்ததாக காத்திருக்கும் தயாரிப்பாளர்களிடம்தான் இந்த ரூ.3 கோடி சம்பளத்தை சொல்லி தத்தளிக்க விட்டிருக்கிறார். அப்படி தத்தளிப்பவர்கள் யார் யார்? ஒருவர் டைரக்டர் ஜனநாதன். மற்றவர் பா.ம.க வின் முக்கிய செயல் தலைவர்களில் ஒருவரான கோ.க.மணி!.