‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு. பிளாக் டிக்கெட் கம்பெனி என்ற பெயரில் சொந்த பட நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனம் சார்பில் வெங்கட் பிரபு தயாரித்து இயக்கி இருக்கும் படம் சென்னை 28 இரண்டாம் பாகமான சென்னை 28 இரண்டாவது இன்னிங்ஸ். இந்தபடத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் தலைமையில் கோலாகலமாக மலேஷியாவில் நடைபெற்றது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள சொப்பன சுந்தரி என்ற பாடல் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பை பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக்கின் பிறந்த நாளான நேற்று அதாவது அக்டோபர் 20ஆம் தேதி அன்று நிறைவு செய்தனர். இப்படத்தை முதலில் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டனர். போதிய தியேட்டர்கள் கிடைக்காது என்பதால் சில வாரங்கள் தள்ளி நவம்பர் 10ஆம் தேதி வியாழக்கிழமையன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.
இதற்கிடையில் சென்னை 28 இரண்டாவது இன்னிங்ஸ் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை அபிஷேக் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. முன்னணி ஹீரோக்களின் பல படங்களுக்கு இந்த நிறுவனம்தான் கோடிக்கணக்கில் பைனான்ஸ் செய்து வருகிறதாம்.
"என்னுடைய பாலிய கால சிநேகிதத்தை என் மனதில் மீண்டும் விதைத்த திரைப்படம் சென்னை 28. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தோடு நாங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒரு விநியோக நிறுவனமாக, எங்கள் படத்தை விளம்பர படுத்துவதில் நாங்கள் மும்மரமாக ஈடுப்பட்டு வருகிறோம். இதுவரை நாம் அனைவரும் ஐ பி எல் ஆட்டத்தை பார்த்து கொண்டாடி மகிழ்ந்தோம்.... ஆனால் தற்போது நம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் விளையாடக் கூடிய தெருமுனை கிரிக்கெட் ஆட்டத்தை கொண்டாட இருக்கிறோம்...." என்று உற்சாகத்துடன் கூறுகிறார் அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் கே பிள்ளை.