இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஷாரூக்கானும் ஒருவர். தற்போது ரயீஸ், டியர் ஜிந்தகி போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்... அவரைப்பற்றி வரும் கிசுகிசுக்கள் பற்றியும், அதை எப்படி எடுத்து கொள்வீர்கள் என்றும் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து ஷாரூக்கான் கூறியிருப்பதாவது...
‛‛நான் ஒரு நடிகன், இந்த துறையில் சுமார் 20 வருடங்களாக உள்ளேன். உலகின் மிக அழகான பெண்களுடன் பணியாற்றி இருக்கிறேன். நான் வெளிநாட்டவர்கள், ஆண்கள், பெண்கள், சக நடிகைகள் ஆகியோருடன் செக்ஸ் வைத்துக் கொண்டது போன்று செய்தி வெளியிட்டார்கள். ஆனால் இதுபோன்ற வதந்திகள் எந்த விதத்திலும் என்னையும், என் மனைவி கெளரியையும் பாதிக்காது. ஏனென்றால் என்னைப்பற்றி என் மனைவிக்கு தெரியும், நான் வேலையை தவிர மற்றதை கவனிக்க எனக்கு நேரமில்லை என்று... எனக்கும், என் மனைவிக்கு கருத்து வேறுபாடு வந்தால் அது குழந்தைகளுடன் அதிகநேரம் செலவிட முடியவில்லையே என்பதாகத்தான் இருக்கும்'' என்று கூறியுள்ளார்.