‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஒரு ஹிட் படம் கொடுத்துவிட்டால், ஒரு ஆறு மாதங்கள் ஆறப்போட்டுவிட்டு அதற்கப்புறம் தான் அதன் இரண்டாம் பாகம் எதுவும் எடுக்கிறீர்களா என்கிற கேள்வி கேட்கப்படும். சொல்லப்போனால் அப்படி கேள்வி கேட்கப்பட்ட பின்னர்தான் நம்ம படத்துக்கு ரெண்டாம் பாகம் கூட எடுக்கலாமா என்கிற யோசனையே சில இயக்குனர்களுக்கு தோன்றும். ஆனால் மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் 'புலி முருகன்' படம் வெளியாகி இரண்டு வராம் கூட ஆகாத நிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா என படத்தின் இயக்குனர் வைசாக்கிடம் கேட்கப்பட்டது..
அதற்கு அவர் “'புலி முருகன்' இரண்டாம் பாகம் எடுப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை.. ஆனால் நிச்சயமாக இன்னும் இரண்டு வருடங்களுக்காவது அது பற்றியே பேச்சே இல்லை. இந்தப்படத்தையே ஒரு தவம் மாதிரி நினைத்து உழைத்த எங்களது யூனிட்டார், இப்போதுதான் விடுதலை பெற்று அவரவர் வீட்டிற்கே சென்றுள்ளார்கள்.. எதிர்காலத்தில் இதே டீம், முதல் படத்திற்கு ஒத்துழைத்த இதே எனர்ஜியுடன் இருக்குமானால் அப்போது தான் இரண்டாம் பாகம் எடுப்பதை பற்றி யோசிக்கவே முடியும்” என கூறியுள்ளார்.