டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
துல்கர் சல்மான் தமிழில் நடித்தது வெறும் இரண்டு படங்கள் தான்... அதில் அவரை இளைஞர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'ஓ காதல் கண்மணி' படம். ஆனால், அதற்கு முன்னரே குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரிடம் 'வாயை மூடி பேசவும்' படம் அவரை பிரபலப்படுத்திவிட்டது... அதுதான் சில தினங்களாக திருப்பூரில் நடைபெற்று வரும் அவரது மலையாள படப்பிடிப்பில் அவரைக்காண பள்ளிக்குழந்தைகளை கூட்டம் கூட்டமாக வரவைத்தும் விட்டது.
துல்கர் சல்மான் தற்போது பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. கேரளா மற்றும் தமிழகம் என இரண்டு பகுதிகளிலும் நடக்கும் கதை என்பதால் கடந்த சில தினங்களாக திருப்பூரில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.. மாலை நேரத்தில் படப்பிடிப்பில் இருந்த தன்னைக்காண கூடியிருந்த கூட்டத்தை, குறிப்பாக பள்ளிச்சீருடையுடன் குழுமியிருந்த மாணவர்களை கண்டு சந்தோஷத்தில் திகைத்து போய்விட்டாராம் துல்கர் சல்மான். இந்தப்படத்தில் துல்கரின் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.