சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
முன்னாள் பாரத பிரதமர் இந்திர, தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தை பின்னணியாக கொண்டு உருவாகி உள்ள படம் 31 அக்டோபர். கலவரத்தில் சிக்கிக் கொண்ட அப்பாவி சீக்கிய குடும்பம் ஒன்று உயிருக்கு பயந்து ஓடிய கதை.
இந்தப் படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்று தணிக்கை குழு சான்றிதழ் தராமல் இழுத்தடித்தது. பின்னர் பல மாத போராட்டத்திற்கு பிறகு சில காட்சிகள் நீக்கப்பட்டு தணிக்கை சான்றிதழ் பெற்றனர். அதன் பிறகு நிகழ்கால தலைவர்கள் சிலர் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி அஜய் கட்டாரா என்பவர் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ரோஹனி, மற்றும் நீதிபதி சங்கீதா திங்ராசேகர் ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. "31 அக்டோபர் படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மேலும் திரைப்பட தணிக்கை வாரியம் முறைப்படி அனுமதி வழங்கி உள்ளது. எனவே இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை" என்று வழக்கை தள்ளுபடி செய்தனர். இதையடுத்து படம் வெளியாவதில் இருந்த தடை நீங்கியது, இதனால் படம் திட்டமிட்டபடி இன்று வெளியானது.