'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சேது, காசி, பிதாமகன், சாமி, அந்நியன் ஆகிய படங்களில் விக்ரமின் கேரியரில் முக்கியமானவை. ஆனால் அப்படி அவர் நடித்த எந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமும் தொடங்கப்படாத நிலையில், டைரக்டர் ஹரி மட்டும் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் சிங்கம்-3 படத்தை இயக்கி வரும் ஹரி, அப்படத்தை முடித்ததும் விக்ரமை வைத்து சாமி-2 படத்தை இயக்குவார் என்றுதான் இதுவரை செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இப்போது சம்பந்தப்பட்டவர்களை விசாரித்தபோது, சாமி-2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம்தான் தொடங்கயிருப்பதாக சொல்கிறார்கள்.
அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஏற்கனவே ஜீவா நடித்த சிங்கம்புலி படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு கருடா என்ற படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்தார் விக்ரம். ஆனால், படத்தை இயக்கயிருந்த திருவுக்கும், தயாரிப்புத்துறைக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட கருடா படம் ட்ராப் செய்யப்பட்டது. இருப்பினும், அந்நிறுவனம் விக்ரமை வைத்து அதே கால்சீட்டில் இன்னொரு படம் தயாரிக்க முடிவெடுத்து தற்போது பல டைரக்டர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறது. அதோடு, தங்களுக்கு கால்சீட் கொடுத்தபடி நடித்த பிறகுதான் வேறு படங்களில் நடிக்க வேண்டும் என்றும் விக்ரமை கேட்டுக்கொள்ளப்பட் டுள்ளதாம். அதற்கு அவரும் சம்மதம் சொல்லியிருக்கிறாராம். ஆக, ஜூன் மாதம் சாமி-2வில் நடிப்பதற்கு முன்பாக இன்னொரு படத்தில் விக்ரம் நடித்து முடித்து விடுவார் என்று தெரிகிறது.