இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மணிரத்னத்தின் தளபதி, ரோஜா படங்களில் நடித்து பிரபலமான அரவிந்த்சாமி, உதிரிப்பூக்கள் மகேந்திரன் இயக்கிய சாசனம் படத்திற்கு பிறகு 7 ஆண்டுகளா க நடிப்பை விட்டு விலகியிருந்தார். பின்னர், மீண்டும் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் ஒரு பாதிரியார் வேடத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தவர், மோகன்ராஜா இயக்கிய தனிஒருவன் படத்தில் வில்லனாக நடித்து மறுபடியும் மார்க் கெட்டை பிடித்தார். அதையடுத்து பல படங்கள் தேடிவந்தபோதும் தனக்கு பொருந்தக்கூடிய கேரக்டர்களை மட்டும் ஓகே பண்ணி வரும் அரவிந்த்சாமி, டியர் டாட், போகன், துருவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அடுத்தபடியாக அவர் அர்ஜூன் நடித்த கர்ணா, ஜீவன் நடித்த நான் அவனில்லை உள்பட பல படங்களை இயக்கிய செல்வா இயக்கும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். கமர்சியல் கதையில் உருவாகும் அந்த படத்திலும், நான் அவனில்லை படம் போன்று அரவிந்த்சாமியுடன் 4 நாயகிகள் நடிக்கிறார்கள். அந்த வகையில், இனியா, வேதிகா உள்ளிட்ட சில நடிகைகளிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது.