தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆரண்யகாண்டம், ஜிகர்தண்டா, ஜோக்கர், குற்றமே தண்டனை உள்பட பல படங்களில் நடித்தவர் குரு சோமசுந்தரம். தற்போது இது வேதாளம் சொல்லும் கதை, யாக்கை, நேய் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதில் யாக்கை படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார். அதுவும் அதிரடி வில்லனான பிர காஷ்ராஜக்கே அவர் பாஸாக நடித்துள்ளாராம்.
அந்த அனுபவம் குறித்து குரு சோமசுந்தரம் கூறுகையில், பிரகாஷ்ராஜ் மிரட்ட லான வில்லன். அவரது நடிப்பை பல படங்களில் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். ஆனால், அப்படிப்பட்ட எனக்கு யாக்கை படத்தில் அவரையே மிரட்டும் பாஸ் வேடம் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் நான் சொல்லும் வேலைகளைத்தான் அவர் செய்து முடிப்பார். ஆனால் அப்படி அவரை மிரட்டி நடித்து விட்டு அதன்பிறகு அதை நினைத்து நானே சிரித்துக்கொள்வேன். அவரோ, என்னையா மிரட்டுறே என்று என்னை விரட்டுவார். ஆக, அந்த படத்தில் பிரகாஷ்ராஜூடன் நடித்தது ரொம்ப ஜாலியான அனுபவமாக இருந்தது என்கிறார் குரு சோமசுந்தரம்.