600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் யூனிட்டில் கிரேனில் வேலை பார்த்து வந்தவர் கிரேன் மனோகர். அதன்பிறகு சின்னச்சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கிய அவர் பின்னர் நிறைய படங்களில் காமெடியனாக நடிக்கத் தொடங்கினார். தற்போது சிங்கம்-3, நாடோடி கனவுகள் உள்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் சிங்கம்-3 படத்தில் சிங்கம் படத்தின் முதல் இரண்டு பாகங்களில் நடித்தது போன்று அனுஷ்கா வீட்டு கார் டிரைவராகவே நடித்து வருகிறார். மேலும், மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்து வரும் நாடோடி கனவு கள் படத்தில் இதுவரை நடிக்காத ஒரு அழுத்தமான ரோலில் நடித்திருக்கிறார் கிரேன் மனோகர்.
அதுபற்றி அவர் கூறுகையில், நான் இதுவரை நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் எல்லா படங்களிலுமே என்னை கமெடியனாகத்தான் பார்த்தனர். எனக்குள் இருக்கும் குணசித்ர நடிகரை யாரும் கவனிக்கவில்லை. ஆனால், நாடோடி கனவுகள் படத்தின் டைரக்டர் எனக்குள் இருக்கும் குணசித்ர நடிகரை வெளியே கொண்டு வந்திருக்கிறார். அந்த படத்தில் கிராமவாசியாக நான் நடித்திருக்கிறேன். ஆனால் அழுத்தமான எமோசனல் காட்சிகள் உள்ள வேடம் அது. அந்த காட்சிகளில் நான் ஒரு காமெடியன் என்பதை மறந்து குணசித்ர நடிகராக நடித்து யூனிட்டையே கலங்க வைத்தேன். அதனால், இந்த படம் திரைக்கு வரும்போது, காமெடி நடிகரான என்னை குணசித்ர நடிகராகவும் ரசிகர்கள் அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன் என்கிறார் கிரேன் மனோகர்.