ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒவ்வொரு வருட தீபாவளிக்கு முன்பும் புதுப் பட வெளியீடுகள் மிகவும் குறைவாக இருக்கும். அதற்கு இரண்டு வாரம் முன்பாக எந்தப் புதுப்படங்களையும் வெளியிட மாட்டார்கள். தீபாவளிக்கு எப்படியும் பெரிய படங்கள்தான் வரும். அந்தப் படங்களுக்காக சில பல கோடிகள் விளம்பரம் செய்து படத்தைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள். அதனால்தான் சில சிறிய படங்கள் கூட தீபாவளி எதிரில் இருக்கும் போது படத்தை வெளியிட விரும்ப மாட்டார்கள். அப்படி ஒரு நிகழ்வு கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்த் திரையுலகத்தில் இருந்து வருகிறது.
அக்டோபர் 7ம் தேதியன்று 'ரெமோ, றெக்க, தேவி' ஆகிய படங்கள் வெளிவந்தன. மூன்று படங்களுமே வெற்றி பெற்று இரண்டு வாரங்களை வெற்றிகரமாக முடிக்க உள்ளன. அக்டோபர் 14ம் தேதியன்று 'அம்மணி' படம் மட்டுமே தனியாக வெளிவந்தது. நாளை 21ம் தேதி 'காகித கப்பல், நீ என்பது' ஆகிய இரண்டு சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகின்றன. இவற்றோடு ஏற்கெனவே வெளிவந்த 'கதிரவனின் கோடை மழை' படத்தை மீண்டும் வெளியிடுகிறார்கள்.
அடுத்த வாரம் தீபாவளியன்று 'காஷ்மோரா, கொடி' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகிறது. இந்த இரண்டு படங்களையும் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியிட அவற்றின் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.