பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நம் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பக்கா ஆக்சன் படம் என்றால் அதில் ஏதோ ஒரு ரூபத்தில் ஒரு குத்துப்பாடல் ஒன்று இடம்பெறும், இடம்பெற வேண்டும். அதுவும் குறிப்பாக கிளைமாக்ஸுக்கு முன்னதாக இடம்பெற்று ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும். ஆனால் மலையாள படங்களில் குத்துப்பாடல்கள் என்பது அரிது.. அதிலும் ஆக்சன் படங்கள் என்றால் பாடல்களே இல்லாத நிலைதான்.. சமீபத்தில் வெளியான மோகன்லாலின் 'புலி முருகன்' என்கிற ஆக்சன் படத்தில், கவர்ச்சி நாயகி நமீதா இருந்தும் கூட, ஒரு ஐட்டம் சாங் வைக்காதது ஏன் என அந்தப்படத்தின் இயக்குனர் வைசாக்கிடம் கேட்கப்பட்டது..
அதற்கு அவர், “நமீதா இருந்தால் ஐட்டம் பாடல் வைக்கணுமா என்ன..? அவர் அந்த கதைக்கு எந்த அளவுக்கு தேவைப்பட்டாரோ அந்த அளவுக்கு அவரை நன்றாக பயன்படுத்தி உள்ளோம்.. கதைக்கு தேவை என்பதால் தீம் சாங்கையும், கதையோடு இணைந்ததால் மோகன்லால்-கமாலினி முகர்ஜி சம்பந்தப்பட்ட பாடலையும் வைத்தோமே தவிர, அதைக்கூட வலிந்து திணிக்கவில்லை. 'புலி முருகன்' போன்ற விறுவிறுப்பான ஆக்சன் படங்களை பார்க்க வரும் ரசிகர்களை கமர்ஷியல் என்கிற போர்வையில் குத்துப்பாடல்களை இணைத்து அவமதிக்க கூடாது.. அது ஆக்சன் படத்துக்கான தர்மமும் அல்ல' என கூறியுள்ளார் வைஷாக். நம்மவர்கள் கவனிப்பார்களா..?