பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
மலையாள சினிமாவின் இளம் நாயகன் பிருத்விராஜின் திரையுலக வாழ்க்கையில் இன்னும் நடைபெறாத இரண்டு ஆச்சர்யங்கள் உண்டு.. ஆம்.. பிருத்விராஜ் மலையாள சினிமாவில் ஹீரோவாக அடியெடுத்து வைத்து கிட்டத்தாட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்துவிட்டாலும் கூட மலையாள சினிமாவின் ஸ்டார் இயக்குனர்களில் ஒருவரான பிரியதர்ஷன் இயக்கத்தில் இன்னும் ஒரு படம் கூட நடிக்கவில்லை.. இன்னொன்று சீனியர் நடிகரும் மலையாள சூப்பர்ஸ்டாருமான மோகன்லாலுடனும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பதும் ஆச்சர்யம் தான்.
இப்போது மோகன்லாலை வைத்து 'லூசிபர்' என்கிற படத்தை இயக்குவதன் மூலம் அவருடன் பிருத்விராஜ் கூட்டணி சேர்ந்தாலும், இருவரையும் இணைத்து நடிக்கவைக்கும் வேலையை செய்யப்போவது யார். என்கிற கேள்விக்கு விடை தெரியாமலேயே இருந்து வந்தது. முன்பு இயக்குனர் லால்ஜோஸ் அந்த பணியை கையிலெடுத்து, பல காரணங்களால் அது முடியாமல் போக, அதை கைவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.. ஆனால் இயக்குனர் பிரியதர்ஷன் தற்போது அந்த வேலையை மேற்கொள்ளப்போகிறார்.. ஆம்.. 'ஒப்பம்' படத்தின் வெற்றிக்குப்பின் மோகன்லால், பிருத்விராஜ் இருவரையும் இணைத்து படம் ஒன்றை இயக்கப்போகிறார். ஸ்போர்ட்ஸ் சம்பந்தமாக உருவாகும் அந்தப்படத்தில் பிருத்விராஜ் விளையாட்டு வீரராகவும், மோகன்லால் அவரது கோச்சாகவும் நடிக்க இருக்கிறார்களாம்.