மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'. கரண் ஜோகர் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்., 28-ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்தப்படத்தில் பாகிஸ்தான் நடிகர் பவாத்கான் நடித்திருப்பதால் படத்தை திரையிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் எம்என்எஸ்., கட்சியினர் படத்தை திரையிட விடமாட்டோம், மீறினால் தியேட்டரில் புகுந்து தாக்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் படம் ரிலீஸாவதில் சிக்கல் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில், ஏய் தில் ஹே முஷ்கில் படத்திற்கு தெலுங்கானாவிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தெலுங்கானாவில், பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ.,-வான ராஜா சிங், இந்தப்படத்தில் பாகிஸ்தான் நடிகர் நடித்திருப்பதால் நம் தேசப்பற்றை காண்பிக்க இப்படத்தை திரையிடக்கூடாது, மீறி திரையிட்டால் தியேட்டர்கள் தாக்கப்படும் என ஐதராபாத்தில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.