மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இந்திய அரசு சார்பில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட சுமார் 250 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தமிழ்ப்படங்களும் அடக்கம். சுதா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடித்த 'இறுதிச்சுற்று', பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க-2', மற்றும் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த '24' ஆகிய படங்களே அவை.
இவற்றில் 24, மற்றும் பசங்க - 2 ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்தது சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம். தன்னுடைய பேனரில் தயாரித்த இரண்டு படங்கள் இந்தியன் பனோரமாவுக்கு தேர்வாகியுள்ளது தெரிய வந்ததும் மகிழ்ச்சியடைந்த சூர்யா, தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்திற்கு கிடைத்த மிக பெரிய கௌரவம் என்று பெருமிதப்பட்டாராம்.
சிங்கம்-3 படத்தை முடித்துவிட்டு தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வரும் சூர்யா, தன்னுடைய படங்கள் திரையிடப்படும் தினங்களில் கோவா சென்று சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருக்கிறாராம்.