ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிவகார்த்திகேயன் மீது தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் வேந்தர் மூவிஸ் மதன் சார்பில் கொடுக்கப்பட்ட புகார்தான் இப்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக்.
சிவகார்த்திகேயனுக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட் இத்தனை குறுகிய காலத்தில் கிடைப்பதற்கு எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும் ஒரு காரணம். கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை என தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்ததோடு அப்படங்களுக்கு மிகப்பெரிய பப்ளிசிட்டி செய்து வெற்றிப்படமாக்கினார்.
காக்கி சட்டை படத்தை அடுத்து தன்னுடைய பேனரில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுத்ததாகவும், தற்போது தன் நண்பர் பெயரில் சொந்தப்பட நிறுவனம் தொடங்கியதால் தன்னுடைய நிறுவனத்துக்கு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார் என்பது மதனின் புகார். இதேபோல் ஞானவேல்ராஜா, வேந்தர் மூவிஸ் மதன் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிவகார்த்திகேயனோ, தான் ஞானவேல்ராஜாவிடம் மட்டுமே படம் பண்ண பணம் வாங்கியுள்ளதாகவும், மற்றவர்கள் தன்னை கட்டாயப்படுத்துவதாகவும், இதை சட்டப்படி சந்திக்க தயார் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து ரெமோ படத்தின் கோவை விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியத்திடம் ஒரு ஆங்கில ஊடகம் பேட்டி எடுத்து வெளியிட்டது. “சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் முக்கிய பங்கு எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனுக்கு உண்டு. எனவே அவருக்கு, சிவகார்த்திகேயன் படம் பண்ணிக் கொடுப்பதுதான் நியாயம். அதேபோல் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கியதால் ஞானவேல்ராஜா, வேந்தர் மூவிஸ் மதன் இருவருக்கும் படம் பண்ண வேண்டும்” என்று அந்தப் பேட்டியில் கருத்து தெரிவித்திருந்தார் திருப்பூர் சுப்பிரமணியம்.