டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பொங்கி எழு மனோகரா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை அருந்ததி நாயர். அந்த படத்தில் இர்பானுக்கு ஜோடியாக நடித்த அவர் பின்னர் புதுமுகம் சஞ்சய் நடித்த விருமாண்டியும் சிவனாண்டியும் என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் நடித்துள்ளார். முந்தைய படங்களை விட இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார். சைக்கோ கணவனிடம் சிக்கிக்கொண்டு அவர் படும் அவஸ்தைகள்தான் அந்த படத்தின் மையக்கருவாம். அதனால் இந்த படத்தை ரொம்ப பெரிய அளவில் எதிர்பார்ப்பதாக சொல்கிறார் அருந்ததி நாயர்.
மேலும் அவர் கூறுகையில், முதல் இரண்டு படங்களிலும் காதல் கதைகளில் நடித்துள்ள எனக்கு இந்த படத்தில நடித்துள்ள குடும்பப் பெண் வேடம் சேலஞ்சிங்காக இருந்தது. முதலில் கதை சொல்லும்போது இவ்வளவு பெரிய வேடத்துக்கு நம்மை எங்கு செலக்ட் பண்ணப் போகிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து அந்த வேடத்தைக்கொடுத்தார்கள். அதனால் கதையை உள்வாங்கி நடித்தேன். என் நடிப்பைப்பார்த்து விட்டு அனைவரும் பாராட்டுகிறார்கள். அதனால் சைத்தான் படம் திரைக்கு வரும்போது, எனக்கு இன்னும் வெயிட்டான வேடங்கள் கிடைக்கும். முக்கியமாக முன்னணி ஹீரோக்களின் படங்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதனால்தான் புதிதாக என்னை புக் பண்ண வந்த இயக்குனர்களிடம் சைத்தான் படத்தைப்பார்த்த பிறகு அடுத்த படத்தைப்பற்றி பேசுவோம் என்று கூறியுள்ளேன் என்கிறார் அருந்ததி நாயர்.