ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2017 பொங்கலுக்கு திரையிட தயாராகி வரும் சிரஞ்சீவியின் 150வது திரைப்படம் கைதி நம்பர் 150. விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் இயக்கிய கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்தை தெலுங்கில் இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். இப்படத்தைத் தொடர்ந்து, சிரஞ்சீவி நடிக்கவிருக்கும் அவரது 151வது படத்தை இயக்குனர் பொய்யப்படி ஸ்ரீனு இயக்கவுள்ளார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்துடன் அஸ்வின் தத் இப்படத்தை தயாரிக்கின்றார். இப்படத்திற்கு பின்னர் சிரஞ்சீவிக்கு நடிக்கும் 152வது படத்தை இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஸ்ரீநிவாஸ், தனது வைஜெயந்தி பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என இயக்குனர் தரப்பிலிருந்து உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்துள்ளன.