ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் தமிழில் எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையாமல் போனதால், பல வருடங்களுக்கு முன்னாடியே மலையாள சினிமா பக்கம் சென்றவர். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் படம் முழுவதும் வரும் நெகட்டிவான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் லைம்லைட்டிற்கு வந்தார் பாலா. இருந்தாலும் அவருக்கு தன்னை அழுத்தமாக நிலைநிறுத்திக்கொள்ள இன்னும் ஒரு வலுவான கேரக்டரும் வெற்றியும் தேவைப்பட்டது.
'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் அவரது நடிப்பை பார்த்துவிட்டே, 'புலி முருகன்' படத்தில் அவருக்கு படம் முழுவதும் வரும்படி வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரத்தை கொடுத்தார் இயக்குனர் வைசாக். மோகன்லாலுக்கு அடுத்தபடியாக படத்தின் கதையை நகர்த்திக்கொண்டு சென்றதில் பாலாவின் கேரக்டருக்கு முக்கிய பங்கு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. வில்லன் ஜெகபதிபாபுவின் மகனாக நடித்திருந்த பாலா தனக்கு கிடைத்திருந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். 'புலி முருகன்' படத்தை தொடர்ந்து சில முக்கியமான இயக்குனர்களின் பார்வை பாலாவின் பக்கம் திரும்பியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.