‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மாயா, நீ எங்கே என் அன்பே (இந்தி கஹானி) படங்களுக்கு பிறகு ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் நயன்தாரா. தற்போது டோரா என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் புதுமுக இயக்குனர் கோபி நாயனார் என்பவர் இயக்கும் படத்தில் சத்தமே இல்லாமல் 24 நாட்களை கொண்ட ஒரே ஷெட்யூலில் நடித்து முடித்து விட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி தாலுகாவில் உள்ள அப்பனூர் என்ற கிராமத்திலும் அதை சுற்றிலுமே படப்பிடிப்பு நடந்தது. நயன்தாரா மாவட்ட கலெக்டராக நடிக்கும் இந்தப் படத்தில் காக்கா முட்டை விக்னேஷ், ரமேஷ், வேல ராமமூர்த்தி, ராமதாஸ், சுனுலட்சுமி, ராம்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். கிளைமாக்ஸ் சண்டை காட்சியை பீட்டர் ஹெய்ன் அமைத்துள்ளார். கே.ஜே.ஆர்., ஸ்டூடியோஸ் சார்பில் கோட்பாடி ஜெ.ராஜேஷ் தயாரிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது தனக்கு நெருக்கமான கேரள நண்பர்களை கொண்டு நயன்தாரா சொந்தமாக தயாரிக்கும் படம் என்ற தகவலும் உண்டு.