புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
இயக்குனர் ஷங்கர் படத்தின் கதையும், ஷூட்டிங் ஸ்பாட்டும் படம் வெளிவரும்வரை மிகமிக ரகசியமாக இருக்கும். படப்பிடிப்பு தளத்திற்குள் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது. படப்பிடிப்பு குழுவினர் தவிர வேறு உள்ளே வரக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் இருக்கும். தனியார் பாதுகாப்பு பவுன்சர்கள் படப்பிடிப்பை சுற்றி நிறுத்தப்பட்டிருப்பார்கள்.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருக்கழுக்குன்றத்தில் நடக்கும் படப்பிடிப்பிற்கு ரஜினி சென்ற படங்கள் இணையதளங்களில் வெளியானது. அது ரசிகர்களால் செல்போனில் எடுக்கப்பட்டது. தற்போது பாடல் காட்சி படமாக்குப்படும் ஷூட்டிங் ஸ்பாட் படம் வெளிவந்துள்ளது.
திருக்கழுக்குன்றம் மலைக்குள் இயற்கையுடன் இணைந்து செயற்கையாக அமைக்கப்பட்ட பசுமை பின்னணியில் ரஜினி வெள்ளை உடையிலும் எமி ஜாக்சன் வெள்ளை கவுனிலும் தோன்றுகிறார்கள். அதனை டிராலி உதவி கொண்டு 4 ஹாலிவுட் கலைஞர்கள் படமாக்குகிறார்கள். இந்த படம் வெளிவந்ததால் ‛2.O' படக் குழுவினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்தப் படம் யார் எடுத்தது? எப்படி வெளியில் வந்தது? என்பதை தீவிரமாக விசாரிக்குமாறு ஷங்கர் தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.