பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
இயக்குனர் ஷங்கர் படத்தின் கதையும், ஷூட்டிங் ஸ்பாட்டும் படம் வெளிவரும்வரை மிகமிக ரகசியமாக இருக்கும். படப்பிடிப்பு தளத்திற்குள் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது. படப்பிடிப்பு குழுவினர் தவிர வேறு உள்ளே வரக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் இருக்கும். தனியார் பாதுகாப்பு பவுன்சர்கள் படப்பிடிப்பை சுற்றி நிறுத்தப்பட்டிருப்பார்கள்.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருக்கழுக்குன்றத்தில் நடக்கும் படப்பிடிப்பிற்கு ரஜினி சென்ற படங்கள் இணையதளங்களில் வெளியானது. அது ரசிகர்களால் செல்போனில் எடுக்கப்பட்டது. தற்போது பாடல் காட்சி படமாக்குப்படும் ஷூட்டிங் ஸ்பாட் படம் வெளிவந்துள்ளது.
திருக்கழுக்குன்றம் மலைக்குள் இயற்கையுடன் இணைந்து செயற்கையாக அமைக்கப்பட்ட பசுமை பின்னணியில் ரஜினி வெள்ளை உடையிலும் எமி ஜாக்சன் வெள்ளை கவுனிலும் தோன்றுகிறார்கள். அதனை டிராலி உதவி கொண்டு 4 ஹாலிவுட் கலைஞர்கள் படமாக்குகிறார்கள். இந்த படம் வெளிவந்ததால் ‛2.O' படக் குழுவினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்தப் படம் யார் எடுத்தது? எப்படி வெளியில் வந்தது? என்பதை தீவிரமாக விசாரிக்குமாறு ஷங்கர் தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.