ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம்பெற வேண்டி அவரது கட்சியினர் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளை நடத்துகிறார்கள். மற்ற கட்சியின் தலைவர்கள் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வருகிறார்கள். திரைப்படத்துறையின் சார்பில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நலம் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் முதல்வர் பூரண நலம்பெற தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை பிரமாண்ட யாகம் ஒன்றை நடத்துகிறது. வருகிற 21ந் தேதி அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள வர்த்தக சபை கட்டிடத்தின் மொட்டை மாடியில் இந்த யாகம் நடக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் இந்த யாகம் மிருத்யுஞ்ஜய மூல மந்திர ஜெபம், மற்றும் மஹா மிருத்யுஞ்சய யாகம் என்று அழைக்கப்படுகிறது. 30 சிவாச்சாரியார்கள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஓதுகிறார்கள்.
இதில் திரையுலகினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் யாகத்துக்கு வருகிறவர்கள் செல்போன் கொண்டு வருவதையும், அநாகரீக உடைகள் அணிந்து வருவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் திரைப்பட வர்த்தக சபை கேட்டுக்கொண்டுள்ளது.