டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவில் பைட் நடிகராக இருந்து பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் கொடூரமான வில்லனாக அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன். அதையடுத்து பல படங்களில் அவர் வில்லனாக நடித்தார். என்றபோதும் பின்னர் அவர் காமெடி கலந்து நடித்த வேடங்கள் அவரை பிரபலமாக்கியது. தற்போது அவர் பேசப்படும் காமெடியன்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும், சில மெகா படங்களில் மற்ற நடிகர்களைப்போலவே தனக்கும் கேரவன் வசதி செய்து கொடுத்தபோதும், அவர் கேரவனுக்குள்ளேயே செல்வதில்லை. ஆரம்ப காலத்தில் எப்படி படப்பிடிப்பு தளத்திலேயே இருப்பாரோ அதேபோல்தான் தனக்காக காட்சிகள் படமாகாத போதும் படப்பிடிப்பு தளத்திலேயே அமர்ந்திருக்கிறார் ராஜேந்திரன்.
இப்படி வசதி வாய்ப்புகள் வந்தபோதும் தனது நிலையில் மாற்றத்தை வெளிப்படுத்தாத மொட்டை ராஜேந்திரன், கேரக்டர் ரீதியாகவும், கெட்டப் ரீதியாகவும் தன்னை வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், இப்போது நான் படத்துக்குப்படம் காமெடியனாகதான் வருகிறேன். சில படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக, பல படங்களில் காமெடி வில்லனாக நடிக்கிறேன். ஆனால், அப்படி நடிக்கும் காமெடி ஒரே மாதிரியாக இருந்தால் ரசிகர்களுக்கு போரடித்து விடும். அதனால் ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொருவிதமான கெட்டப்புகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். அப்படி நடிக்கும்போது காமெடியிலும் புதுமை செய்ய முடியும். அது ரசிகர்களுக்கும் புதிய அனுபவமாக இருக்கும் என்கிறார் மொட்டை ராஜேந்திரன்.