தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தில் நடித்த இரண்டு ஹீரோயின்களில், நாயகன் பஹத் பாசில் காதல் தோல்வியில் துவண்டு கிடந்த சமயத்தில் அவரை காதலித்து உற்சாகப்படுத்தும் ஜிம்ஸி என்கிற கேரக்டரில் நடித்திருந்த அபர்ணா முரளி, ரசிகர்களின் மொத்த ஆதரவையும் தட்டிச்சென்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'ஒரு முத்தச்சி கதா' படத்திலும் இவரது நடிப்பு பாரட்டப்பட்டு வருகிறது.
தமிழிலும் '8 தோட்டாக்கள்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் அபர்ணா. இந்தநிலையில் மலையாளத்தில் தற்போது 'திருச்சிவபேரூர் கிளிப்தம்' என்கிற படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்து வருகிறார் அபர்ணா. இதற்காக ஒரு வராம் ஆட்டோ ஓட்டுவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டாராம் அபர்ணா. அதுமட்டுமல்லாமல் ஆட்டோ டிரைவர் என்பதால் படத்தில் எந்தவித மேக்கப்பும் இல்லாமல் நடித்துள்ளாராம் அபர்ணா. இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார் ஆசிப் அலி. ரதீஷ்குமார் என்கிற அறிமுக இயக்குனர் இந்தப்படத்தை இயக்குகிறார்.