ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
ஒரு படத்தில் நடித்த முடித்த பிறகு சில நாட்கள் மட்டும்தான் ஓய்வு எடுக்கிறார் விஷால். உடனே அடுத்தப் படத்தில் நடிக்கத் தொடங்கிவிடுகிறார். சுராஜ் இயக்கத்தில் கத்திசண்டை' படத்தில் நடித்து முடித்த கையோடு மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து 'இரும்பு திரை' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால்.
இந்தப் படத்தை மித்ரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இரும்பு திரை படத்தில் புதுமையான விஷயம் ஒன்றும் உள்ளது. என்ன அது? இந்தப்படத்தில் முதன்முறையாக ஆர்யா வில்லனாக நடிக்கிறார். பாலாவின் 'அவன் இவன்' படத்தை தொடர்ந்து விஷாலும், ஆர்யாவும் இரும்பு திரை படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருக்கிறார். இப்படத்தை விஷாலின் 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.