தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருளான கரண் ஜோகர், இயக்கம் மற்றும் தயாரிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம் ஏய் தில் ஹே முஷ்கில். இதில் ரன்பீர், அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஆலியாபட் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார்.
‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் நடிகை கஜோலை சிறப்பு ரோலில் நடிக்க வைக்க கரண் ஜோகர் முயற்சித்தார். ஏனென்றால் கஜோலும், கரண் ஜோகரும் நீண்டநாள் நல்ல நண்பர்கள், கூடவே கரணின் அதிர்ஷ்ட நடிகையும் கூட... இதனால் இப்படத்தில் கஜோல் நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கஜோல் நடிக்கவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற கஜோலிடம், இப்படத்தில் நடிக்காதது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்து கஜோல் கூறியதாவது..."‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் நடிக்காதது எனக்கு வருத்தம் தான், ஆனால் தற்போது அதைப்பற்றி பேச வேண்டாம். நான் விருது விழாவிற்கு வந்து உள்ளேன், அதைப்பற்றி பேசுவோம்" என்று கூறினார்.
ஏ தில் ஹே முஷ்கில் படம் இந்த மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது. கஜோல் தற்போது தன் கணவர் இயக்கி வெளியாக இருக்கும் ‛சிவாய்' படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். அஜய்தேவ்கனின் ‛சிவாய்' படமும் 28-ம் தேதி தான் ரிலீஸாக இருக்கிறது.