600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
யூரி தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர், நடிகைகளுக்கு இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடைவதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் அவர்கள் நடித்துள்ள படத்தை திரையிட விடமாட்டோம் என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் ‛ஏ தில் ஹே முஷ்கில்' ரிலீஸாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதைப்பற்றி நடிகை ஆலியாபட்டிடம் பத்திரிக்கையாளர் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து ஆலியா கூறியதாவது...."‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் பார்த்தேன், படம் மிகவும் அழகாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கிறது. படத்திற்கு தடை விதித்தது நியாயமற்றது தான். அதேசமயம் நான் இந்தியா மீது மிகவும் பற்று வைத்துள்ளேன். என் திரைதுறை மீது மரியாதை வைத்துள்ளேன். ஓராண்டாக இந்த பட வேலைகள் நடந்து வந்தது. தற்போது என்ன மாதிரியான நிலை இருக்கிறது என்று தெரியும், விரைவில் இந்தநிலை மாறும் என்று எண்ணுகிறேன் " என்றார்.