டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
முன்பு தியேட்டர்களில் படம் முடிந்ததும் திரையில் தேசியகொடி பறக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் படம் முடிந்து எல்லோரும் சென்று விடுவதால் இந்த நடைமுறை வெற்றி பெறவில்லை. அதன் பிறகு படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இது சில மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ளது. பல மாநிலங்களில் இல்லை.
இதை எதிர்த்தும், எல்லா மாநிலங்களும் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் டில்லியைச் சேர்ந்த ஹர்ஷ் நாகர் என்பவர் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். நீதிபதி ஜி.ரோஹினி, சங்கீதா அடங்கிய அமர்வு ஒன்றை அமைத்தது. நேற்று கூடிய இந்த அமர்வு, மனுதாரரின் புகார் மனு மீது வருகிற டிசம்பர் 14ந் தேதிக்குள் மத்திய மாநில அரசுகள் விளக்க மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.