ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் தீவிரமாக காதலித்து வருவது ஊரறிந்த ரகசியம். இடையில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். இப்போது மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து ஊர் சுற்றியதால் சில விளையாட்டுகளில விராட் கோலி சொதப்பியதாகவும் விமர்சனம் உண்டு.
இந்தநிலையில் (இந்தியாவின் முக்கிய பிரச்னையான) விராட்கோலியின் காதல் பற்றி பள்ளி தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் பிவாண்டி பகுதியில் உள்ள சாச்சா நேரு இந்தி மேல்நிலை பள்ளியில் அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. இதில் இந்தி பாடத்திற்கான தேர்வில் "இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலியின் கேர்ள்பிரண்ட் யார்?" என்று கேள்வி கேட்கப்பட்டு அதற்கு, தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா என மூன்று பதில்களை கொடுத்து சரியான பதிலை கேட்டிருக்கிறார்கள். இது பெரும் சர்ச்சையை ஆக்கியிருக்கிறது. பள்ளி தேர்வில் கேட்க வேண்டிய கேள்வியா...? என விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.