டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியாவில் தயாராகும் படங்களில் இந்தி படங்களின் வியாபார வட்டம்தான் மிகப்பெரியது. தமிழ்ப்படங்களின் வட்டம் தென்னிந்தியாவிற்குள்தான். என்றாலும், ஷங்கர் இயக்கத்தில் தமிழில் உருவான எந்திரன் படம்தான் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவானது. ஆனால் அதையடுத்து ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் எந்திரனை மிஞ்சும் பட்ஜெட்டில் அதாவது 300 கோடியில் தயாரானது. ஆனால் தற்போது மீண்டும் ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படம் 350 கோடியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆக, தற்போதைய நிலவரப்படி இந்த படம்தான் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட் படமாகும்.
மேலும் ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதுவும் ஹாலிவுட் படங்களுக்கு இணையான பிரமிக்க வைக்கும் வகையில் இந்த படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதுவரை வெளியான 3டி படங்களில் இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்கள் 2.ஓ படக்குழுவினர்.