ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் நடித்த கத்தி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அதையடுத்து இந்தியில் ஆகிரா படத்தை இயக்கினார். அப்படம் தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளியான மெளனகுரு படத்தின் ரீமேக் ஆகும். அதைத் தொடர்ந்து அவர் அஜீத் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மகேஷ்பாபுவை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும், மகேஷ்பாபுவின் 23வது படமான இந்த படத்திற்கு வாஸ்கோடகாமா என்று டைட்டீல் வைத்திருப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்தார் முருகதாஸ். இப்போது அப்படத்துக்கு ஏஜென்ட் சிவா என்று டைட்டீல் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தலைப்பினை தீபாவளி அன்று வெளியாகும் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரோடு வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.