ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குக்கூ ராஜூமுருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் குருசோமசுந்தரத்தின் மனைவியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். திருநெல்வேலியைச் சேர்ந்தவரான இவர், அந்த படத்தை அடுத்து சமுத்திரகனி நாயகனாக நடிக்கும் ஆண் தேவதை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கே.பாலசந்தர்-பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடித்த ரெட்டசுழி படத்தை இயக்கிய தாமிரா இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக நடிக்க சில நடிகைகளின் பெயரை பரிசீலனை செய்து கொண்டிருந்த நேரம்தான், ஜோக்கர் படம் வெளியானது. அதில் ரம்யாவின் அலட்டல் இல்லாத நடிப்பைப்பார்த்த தாமிரா, இந்த நடிகைதான் எனது படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை உடனே ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
ஆக, தற்போது சமுத்திரகனி- ரம்யா பாண்டியன் இருவரும் ஆண்தேவதை படத்தில் கணவன்-மனைவியாக நடித்துக்கொண்டிருக்கின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்து விட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சிலதினங்கள் ஆரம்பிக்கிறது. மேலும், சராசரி குடும்பத்தில் நிகழும் பிரச்சினை அடிப்படையில் இந்த படம் உருவாகி வருகிறது. அந்த வகையில், ஜோக்கர் படத்தில் அதிகம் பேசாமல் அமைதியாக நடித்த ரம்யா பாண்டியன், இந்த படத்தில் கணவரிடம் அதிகமாக வாக்குவாதம் செய்யும் வேடத்தில் நடிக்கிறார். அதனால் ஜோக்கர் படத்தில் இருந்து ஆண்தேவதை படம் ரம்யா பாண்டியனை இன்னொரு வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்தும் என்கிறார்கள்.