தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாபு பங்காராம் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷுடன் இணைந்து நடித்த நயன்தாரா, அப்படத்தின் படப்பிடிப்பிற்கு சரியாக வராததால், பெரும் குழப்பங்களும் பிரச்சனைகளும் எழுந்தன. இதனால் இனி தெலுங்கு படங்களில் நயன்தாராவை பார்க்க முடியாது என்றும் கிசுகிசுக்கப்பட்டது. அதற்கேற்ப, சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150, மகேஷ் பாபுவுடன் வாஸ்கோடகாமா போன்ற படங்களில் நாயகியாக நடிக்க வந்த வாய்ப்பை நயன்தாரா நிராகரித்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் கோபிசந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். நயன் விரும்பும் சம்பளத்தை தர தயாரிப்பு நிறுவனமும் தயாராக இருப்பதால், நயன்தாராவும் இப்படத்தில் நடிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக படக்குழுவினர் கூறுகின்றனர். சிரஞ்சீவி, மோகன் பாபு, பாலகிருஷ்ணா நடிப்பில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் கோபால் இயக்கவிருக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் ரமேஷ் தயாரிக்கின்றார்.