600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் நதியா. பிற நடிகைகள் போல நதியாவும் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரீ-என்ட்ரியானார். அவ்வப்போது தனக்கு பிடித்த படங்களில் நடித்து வரும் நதியா, தற்போது ‛‛திரைக்கு வராத கதை'' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். நதியாவுடன் இனியா, ஈடன், கோவை சரளா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். மலையாள பிரபல இயக்குநர் துளசிதாஸ் இயக்கியுள்ளார்.
தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர். இப்படத்தை எம்ஜேடி தயாரிப்பு நிறுவனம் சார்பில் மணிகண்டன் தயாரித்திருக்கிறார். இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கார்த்தியின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‛காஷ்மோரா' மற்றும் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ள கொடி படங்கள் ரிலீஸாகிறது.