டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவின் கவியரசர் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் கவியரசர் கண்ணதாசன். சிறுகூடல்பட்டியில் பிறந்து பட்டி தொட்டியெல்லாம் தன் பாடல் வரிகளை பாய்ச்சிய அந்த காவிய நாயகனின் நினைவு நாள் இன்று. இதையொட்டி பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் இணையதளம் படக்குழுவும் கண்ணதாசனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. "இணையதளம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவையின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. கண்ணணதாசன் நினைவு நாளையொட்டி படப்பிடிப்புத் தளத்தில் கவிஞருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இணையதளம் படத்தின் இயக்குநர்கள் சங்கர், சுரேஷ் பாபு, நடிகைகள் ஸ்வேதா மேனன், சுகன்யா, வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியர் மரபின்மைமைந்தன் முத்தையா ஒளிப்பதிவாளர் திரு. கார்த்திக் ராஜா மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் மலரஞ்சலி செலுத்தினர்.