தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது எந்த ஒரு திரையுலகத்திலும் எது எப்போது நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. அரசியலை விட இங்கு மாற்றங்கள் ஆச்சரியங்கள் கலந்து அதிசயமாக உருவாகும். 'பிதாமகன்' படம் வரை விக்ரமும், சூர்யாவும் நண்பர்களாக இருந்தார்கள். அதன்பிறகு இருவரும் எது போட்டாலும் ஒட்ட முடியாத அளவிற்கு பிரிந்து போனார்கள். எங்காவது சந்தித்தால் ஊருக்காக மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக வணக்கம் சொல்லிக் கொள்வார்கள்.
சூர்யாவின் நெருங்கிய உறவினர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். அவற்றில் பெரும்பாலும் சூர்யாவும், கார்த்தியும், ஜோதிகாவும் மட்டுமே நடிப்பார்கள். வேறு எந்த நடிகர்கள் நடிக்கும் படங்களையும் அதிகம் தயாரிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக சூர்யாவின் நெருங்கிய உறவினரான ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. இது உண்மையா, பொய்யா என கோலிவுட்டிலேயே ஆச்சரிய அலைகள் எழுந்துள்ளன.
'இருமுகன்' வெற்றிக்குப் பிறகு அப்படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர், விக்ரம் இருவரும் இணையும் படத்தைத்தான் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்கிறார்கள். இது எப்படி நடக்கும் என சிலர் தலை மீது கை வைத்து யோசித்தாலும் அல்லது கை மீது தலையை வைத்து யோசித்தாலும் அறிவிப்பு வெளிவரும் வரை தலையை போட்டு குழம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.