இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இதுவரை இல்லாத அளவு மலையாள சினிமாவின் முதல் மெகா பட்ஜெட் படம் என்கிற பெயரை, தான் தயாரித்த 'புலிமுருகன்' படத்தின் மூலம் பெற்றுவிட்டார் படத்தின் தயாரிப்பாளரான தோமிச்சன் முளகுபாடம். மோகன்லாலுடன் இணைந்து இவர் பணிபுரிவது இதுதான் முதன்முறை என்றாலும் 'புலி முருகன்' படத்தின் இயக்குனர் வைசாக்கும் இவரும் சில வருடங்களுக்கு முன்பே, மம்முட்டி நடித்த 'போக்கிரி ராஜா' படத்தின் மூலம் இணைந்து பணியாற்றியவர்கள் தான்.. வைசாக் இயக்கிய 'போக்கிரி ராஜா'வை தயாரிக்க தோமிச்சன் முன்வந்ததற்கு காரணமே அந்தப்படத்தில் அதுவரை இல்லாத மாதிரி மம்முட்டியின் கேரக்டரும் கெட்டப்பும் உருவாக்கப்பட்டு இருந்தது தான். அவர் நினைத்தமாதிரியே அந்தப்படம் ஹிட்டானதுடன் மம்முட்டியின் கேரக்டரும் வெகுவாக பாராட்டப்பட்டது.
அந்த படம் உருவாக்கி வந்த சமயத்திலேயே, அடுத்ததாக மோகன்லால் படத்தை தயாரிக்கலாமே என தோமிச்சனிடம் இயக்குனர் வைசாக் கேட்டுள்ளார்.. அதற்கு, “சூப்பர்ஸ்டார்களை வைத்து நான் படம் தயாரிப்பது பெரிய விஷயமே அல்ல.. ஆனால் நான் அவர்களை வைத்து தயாரிக்கும் படங்கள் இதுவரை அவர்கள் நடித்திராத அளவுக்கு தனித்தன்மையுடன் இருக்கவேண்டும்” என கூறினாராம்.. அதனால் தான் பல வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் வைசாக், மோகன்லாலையும் புலியையும் வைத்து ஒரு பக்காவான ஸ்கிரிப்ட்டுடன் சென்றபோது, அது எவ்வளவு பெரிய பட்ஜெட் ஆனாலும் பரவாயில்லை என 'புலி முருகன்' படத்தை தயாரிக்க முன்வந்தாராம் தோமிச்சன் முளகுபாடம்..